பக்கம்:நாடகக் கலை 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிள்ட்கத்தில் பிரசாரம் 135 எனத் துடித்து வீழ்ந்தான்; அவர் உடல் சாய்ந்தது உயிர் பிரிந்தது. நீதி வழுவியதால் வளைந்த செங் கோலத் தன் உயிரைக் கொடுத்து கிமிர்த்தினுன் பாண்டியன். எவ்வளவு உயர்ந்த பாத்திரம் பாண்டியன்! தமிழினத்திற்கு எத்தனை பெருமை! அவ்வாறு நீதிக்காக ஆவி நீத்த கெடுஞ்செழியனை, தன் காதற் கணவனைக் கொன்ற பாண்டியன், கண்ணகியின் திருவாயாலேயே வாழ்த்துக் காதையில் *தென்னவன் தீதிலன்' என்று சொல்ல வைக்கிருர் இளங்கோவடிகள். இந்தக் கருணை உள்ளமல்லவா காடகாசிரியனுக்கு வேண்டும்! கம்பன் கர்ட்டும் கருணை அடுத்தபடியாக இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். அதைப் போன்ற ஓர் அழியாத நாடகக் காப்பியத்தை இனி காம் பெற முடியுமா? எவ்வளவு அருமையான பாத்திரப் படைப்புகள்! தந்தையின் சொல்லுக்காகப் பதின்ைகு ஆண்டுகள் வனவாசம் செய்த ஒரு தனயன்; தாய் தனக்குத் தேடிக் கொடுத்த அரசைத் தமையனுக்கே கொடுக்க முன் வந்த தம்பி பரதன்; எத்தனை விதமான மன கிலைகளைப்பார்க்கிருேம். ‘கொடியவளாகிய இவளது புதல்வன் பரதன் எனக்கு ஈமச் சடங்குகளும் செய்யத் தக்கவன் அல்லன்' என்று தயரதன் காவால் சொல்லும் அளவுக்கு அவன் மனத்தைமாசுபடுத்திவிட்ட கைகேயி என்ன சாதாரணப் படைப்பா கணவன் தயரதன், மகன் பரதன் முதலிய எல்லோராலும் இவ்வாறு வெறுத்து ஒதுக்கப்பட்ட கைகேயியை, இறுதியில் இராமன் எவ்வாறு போற்று, கிருன்!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/135&oldid=1322681" இலிருந்து மீள்விக்கப்பட்டது