பக்கம்:நாடகக் கலை 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நாடகக் கலை ஒடுகிருளென்று எண்ணிய நான் அவள் சேலையைப் பற்றி இழுத்தேன். அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலாபரணம் அறுந்து அதிலிருந்த முத்துகள் கீழே சிதறியோடின. அதன் பிறகுதான் நான் துரியோதன இனப் பார்த்தேன். அவன் என்ன எண்ணுவானே என்று தலைகுனிந்து கின்றேன். என்தோழன் துரியோதனன் சிரித்துக்கொண்டே என்னை நோக்கிக் கீழே சிதறிக் கிடந்த முத்துகளை "எடுக்கவா? கோக்கவா?’ என்று கேட்டான். அப்படிப்பட்ட கள்ளங்கபடமற்ற கட் பினனை துரியோதனனை விட்டு கான் வருவது துரோக மல்லவா தாயே! என்கிருன் கர்ணன். இந்தக் கட்டத்தில் வில்லிபுத்துாரார் எழுதியுள்ள பாடலைப் பாருங்கள்: மடந்தை போற்றிரு மேகலைமணி புகவே மாசறத் திகழும் ஏகாந்த இடந்தனில் புரிந்தே நான் அயர்ந் திருப்ப, :: எ டுக்கவோ கோக்கவோ' என்ருன்; திடம்படுத் திடுவேல் இராச ராசனுக்குச் செருமுனைச் சென்று செஞ்சோற்றுக் கடன் கழிப் பதுவே எனக்கினிப் புகழும் கருமமும் தருமமும்’ என்ருன். இவ்வாறு பழம் பெரும் கதைகளிலே காணப்படும் சிறப்பும் உயர்வும் இனி நாம் எளிதில் படைக்கக் கூடியனவா? எண்ணிப் பாருங்கள். அமர காவியங்கள் "கள்ளிப் புதர்களும் கற்றழைக் காடுகளும் கிறைக் திருந்த கலைத்துறையை காங்கள் கைப்பற்றி விட்டோம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/138&oldid=1322684" இலிருந்து மீள்விக்கப்பட்டது