பக்கம்:நாடகக் கலை 1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காடகக் கலை றியம், குணநூல் முதலிய பல நாடக இலக்கண நூல் களைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படும் சிலப்பதி காரம் என்ற தமிழ்க் காப்பியத்தில் நாடகக் கலையைப் பற்றியும், காட்சித் திரைகளைப்பற்றியும், நாடக அரங்க அமைப்பைப்பற்றியும் விரிவாகக் கூறப் பெறறிருக் கிறது. இந்தச் சிலப்பதிகார நூலுக்குச் சிறந்த உரை யெழுதிய அடியார்க்குநல்லார் தமது குறிப்பில் நாடகத் தமிழைப் பறறிக் கூறும் பரதம், அகத்தியம் என்னும் நூல்கள் இருந்தனவென்றும் அவை அழிந்துவிட்டன என்றும் குறிப்பிடுகிறர். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெற்கே குமரி முனையை யடுத்து "இலெமூரியாக் கண்டம் என ஒரு பெரிய கிலப்பரப்பு இருந்ததாகவும், அங்கே பாண்டியர் அரசாட்சியில் சங்கம் அமைத்து மொழியாராய்ச்சி கடை பெற்றதாகவும், பெருங் கடல்கோளினுல் அந்த காடு ககரங்கள் அழிவுற்றபோது நாடக இசை, இலக்கண நூல்கள் பல அழிந்து போயினவென்றும் தமிழ் இலக் கியங்களில் பேசப்படுகிறது. அடியார்க்குகல்லார் தம்முடைய காலத்தில் பரத கேளுபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலிய நாடக நூலகள் இருந்தனவாகக் குறித்திருக்கிருர். மகாமகோபாத்யாய டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் நூல் கிலேயத்தின் வெளியீடாக 1944-ல் ‘பரத சேனுபதியம்: எனப் பழந் தமிழ் நூல் ஒன்று வெளி வந்திருக்கிறது. இந்த நூல் அடியார்க்குகல்லார் குறிப்பிடும் பரதசேன பதியம்தான என்பது ஐயத்திற்குரியதாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/25&oldid=1322555" இலிருந்து மீள்விக்கப்பட்டது