பக்கம்:நாடகக் கலை 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 25 அடியார்க்குகல்லார் தம் உரையில் எடுத்துக் காட்டி யுள்ள பரதசேனதிபதியம் என்னும் நூலின் மேற்கோள் வெண்பாக்கள் இந்த நூலில் இல்லை. இவை தவிர பரிதிமாற்கலைஞன் என்னும் திரு. வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் நாடகவியல' என்னும் ஒரு சிறந்த நூலே எழுதியிருக்கிருர். இதில் நாடகத்தைப் பற்றிய பல குறிப்புகள் விரிவாகச் சொல்லப் பெற்றிருக் கின்றன. நாடகம் என்ருல் என்ன; அது எத்தனை வகைப்படும்; எப்படி எழுத வேண்டும்; கடிப்புக் குரிய இலக்கணங்கள் எவை; கதாநாயகர்களுக்குரிய இலக கணங்கள் எவை என்பன எல்லாம் ஆராய்சசி முறை யில் செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருககின்றன. பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்களால் மதங்க சூளாமணி’ என்னும் ஒரு தமிழ் நூல வெளியிடப் பெற் றிருக்கிறது. இதுவும் காடகததைப பற்றிய ஆராயசசி நூலாகும். - பேராசிரியர் மறைமலையடிகளார் சாகுந்தல காடகத் தைப் பறறிய ஆராய்ச்சி ஒன்று வெளியிட்டிருக்கிரு.ர். இதுவும் நன்கு பயன் தரக்கூடிய ஆராய்ச்சி என்பது அறிஞர்கள் கருத்து. நாடகப் பேராசிரியர் பத்மபூஷணம் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் பழம் பெருக தமிழ் நூலகளை பெல் லாம் ஆராய்ந்து நாடகத் தமிழ் என்னும ஒரு சிறந்த நூலை வெளியிட்டிருக்கிறர்கள. இகத நூலின் பிற பகுதியில், தொழில் முறை நாடக சபைகளைப் பற்றிய செய்திகள் முழுதும் கன்கு ஆராய்ந்து சொல்லபபட வில்லையென்ருலும், நாடகத் தமிழைபபறறிய ஆராய்ச்சி கல்ல முறையில் செய்யப்பட்டிருக்கிறது. தா.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/26&oldid=1322556" இலிருந்து மீள்விக்கப்பட்டது