பக்கம்:நாடகக் கலை 1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 31 அரிச்சந்திர விலாசம், தேசிங்குராஜ விலாசம், மன்மத விலாசம் இவ்வாறு பல விலாசங்கள. இந்த விலாசம்' என்ற பெயர் நாடகத்திற்கு ஏன் வந்தது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆராய்ந்து கொண்டிருக் கிருேம். 'விலாசம்’ என்ற பெயருக்கு ஆதி காரணமாக விளங்கியது ஏழாம் நூற்ருண்டில் மகேந்திர பல்லவன் எழுதிய மத்த விலாசம் என்னும் நாடகம் என்று கருதலாம். விலாசம்’ என்ற பெயரால் நாடகம் கடை பெற்றபோதுதான், கடிகர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வாறு சொந்தமாகவே வசனம் பேசவும் தொடங்கி ர்ைகள். சமுதாய நாடகத் தோற்றம் சமுதாய சம்பந்தமான நாடகங்கள் சமீப காலத்தில் தான் தோன்றியனவாகச் சிலர் எண்ணுகிருர்கள். அது தவறு. பல ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய நாடகங் களும் கடந்திருக்கின்றன. முதன் முதலாக மேடையில் கடிக்கப்பட்ட சமுதாய நாடகம் டம்பாச்சாரி விலாசம்' என்பதாகும். இந் நாடகத்தை எழுதியவர் திரு. காசி விசுவநாத முதலியார் என்பவர். இந்த நாடகக் கதை கூடக் கற்பனையன்று. சென்னை சிந்தாதிரிப்பேட்டை யில் வாழ்க் து மறைந்த ஒரு தனவந்தரைப்பற்றிய கதை. இந்த நாடகாசிரியராலேயே பிரம்மசமாஜ காடகம், தாசில்தார் நாடகம் என்னும் வேறிரண்டு நாடகங்கள் சமுதாயச் சீர்திருத்த முறையில் எழுதப்பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/32&oldid=1322562" இலிருந்து மீள்விக்கப்பட்டது