பக்கம்:நாடகக் கலை 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.36 காடகக் கலை ஸ்வாமிகள். அந்த காளில் சுவாமிகள் என்ருலே போதும்; அந்தச் சொல் அவர் ஒருவரைத்தான் குறிக்கும். அவருடைய நாடக அமைப்புத் திறன், அந்த அமைப்பிலே காணப்படும் நுணுக்கம்; காடகப் போக்கிலே காம் கானும் அழகு நாடக பாத்திரங்களின் வாயிலாகப் பாடல்களிலும் உரையாடல்களிலும் அவர் வெளியிட்ட கருத்துக்கள்; அந்தக் கருத்துக்களால் காடகம் பார்ப்பவர்கள் அடைந்த பயன்-இவற்றை யெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது சுவாமிகளின் நாடக நல்லிசைப் புலமை நமக்கு நன்ருகத் தெரிகிறது. சுவாமிகள் தந்த நாடக செல்வம் சுவாமிகள் சுமார் காற்பது நாடகங்கள் எழுதி .யிருக்கிருர், நாடகத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட கதைகள் பெரும்பாலும் அம்மானைப் பாடல்களாக கம்முடைய தாய்மார்கள் சுவையோடு படித்துவக்த பழங்கதைகள்தாம். அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சீமந்தனி, சதியநுகுயா, பிரகலாதன், சிறுத்தொண்டர், வள்ளிதிருமணம், சத்தியவான் சாவித்திரி, சுலோசன சதி இப்படி எல்லாம் கமக்குத் தெரிந்த நாடகங்கள். இவைகளைத் தவிர வடமொழி காடகமாகிய மிருச்சகடியையும், ஷேக்ஸ்பியரின் ரோமியே ஜூலியத், சிம்பலன் ஆகிய நாடகங்களையும், மணிமேகலை, பிரபுலிங்கலீலை ஆகிய தமிழ்க் காப்பியக் கதைகளையும் சுவாமிகள் நாடகமாக்கி இருக்கிருர். சுவாமிகள் எழுதிய அத்தனை நாடகங்களும் அரங் கில் ஆயிரக்கணக்கில் கடிக்கப்பெற்றவை யென்பதை காம் கிஜனவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/38&oldid=1322569" இலிருந்து மீள்விக்கப்பட்டது