பக்கம்:நாடகக் கலை 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 41. மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபையின் காட கங்களையும் கான் பார்த்திருககிறேன். திருவாளர்கள் கே. சாரங்கபாணி, நவாப் ராஜமாணிக்கம், பி. டி. சம் பந்தம், எம். எஸ். முத்துக்கிருஷ்ணன், டி.பி. பொன்னு சாமிப்பிள்ளை, டி. பாலசுப்பிரமணியம், எம். ஆர்.ராதா, ஏ. எம். மருதப்பா, எஸ். வி. வெங்கட்ராமன், டி. கே. கோவிந்தன், சிதம்பரம் ஜெயராமன் முதலிய கடிகர்கள் இச் சபையில் தயாரானவர்கள். 1914-ல் சிறுவர்களை நடிகர்களாகக் கொண்ட நாடக சபைகளோடு சுவாமிகள் தொடர்பு கொண்ட போதுதான் எல்லா நாடகங்களுக்கும் உரையாடல்களை முறையாக எழுதினர் என்று சொல்ல வேண்டும். சுவாமிகளின் அரிய சாதனை சுவாமிகள் நல்ல இசைஞானமுள்ளவர். சந்தம், வண்ணம், இவற்றைப் பாடுவதில் திறமை பெற்றவர். தாள விக்கியாசங்களை நன்கு அறிந்தவர்; எனவே, தாமாகவே இசையமைத்துக் கொள்ளவும் மற்றவர் சொல்லும் மெட்டுகளை அறிந்துகொள்ளவும் அவரால் முடிந்தது. கவரசம் - அதாவது காதல், வீரம், சிரிப்பு, கோபம், வியப்பு, இழிப்பு, சோகம், பயம், சாந்தம் இப்படி ஒன்பது சுவைகள் சொல்லப்படுகின்றன அல்லவா? இந்த கடிப்புச் சுவை குன்ருமல் அந்தந்தக் கட்டத்திற்கு ஏற்றவாறு பாடல்களை அமைக்கும் அதிசயத் திறமை சுவாமிகளிடம் இருந்தது. பாட்டின் மெட்டும் அதில் அமையும் சொற்களும் பாத்திரத்தின் உணர்ச்சி பாவத்தை வெளிப்படுத்துவனவாகவே இருக்கும். நா.-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/43&oldid=1322574" இலிருந்து மீள்விக்கப்பட்டது