பக்கம்:நாடகக் கலை 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 47 நாடக அகடமியின் சார்பில் பாரத ஜனதிபதி இவருக்குச் சிறந்த நாடக நடிகருக்கான விருதுகளை வழங்கியுள் ளார். தமிழ் நாடக உலகம் தமிழ் நாடகத் தலைமை யாசிரியர்' என சங்கரதாஸ் சுவாமிகளையும், தமிழ் நாடகத் தந்தை' என ‘பத்ம பூஷணம் பம்மல் சம்பந்த ைைரயும் இதயத்தில் வைத்துப் போற்றி வருகிறது. எங்கள் சபை 1918-ல் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை தொடங்கிய போது, நானும் என் சகோதர்களும் அதில் நடிகர் களாகச் சேர்ந்தோம். சங்கரதாஸ் சுவாமிகளின் மறை வுக்குப் பின், 1925-ல் மதுரை ரீ பால சண்முகானந்த சபா என்ற பெயரில் சொந்தமாகவே ஒரு நாடகக் குழுவைத் தொடங்கிைேம். அன்று முதல் இயங்கிவரும் எங்கள் குழுவிலும், சிறந்த நடிப்புக் கலைஞர்கள் பலர் தோன்றினர்கள். திரு வாளர்கள் என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சாமி காதன், எஸ். வி. சகஸ்ரநாமம், கே. ஆர். ராமசாமி, எஸ். வி. சுப்பையா, என். எஸ். பாலகிருஷ்ணன், பிரண்ட் ராமசாமி, டி. என். சிவதானு, ஏ. பி. காக ராஜன், டி. வி. நாராயணசாமி, எஸ். எஸ். இராஜேக் திரன், எம். எஸ். திரெளபதி, எம். என். ராஜம் முதலி யோர் எங்கள் குழுவில் வளர்ந்தவர்கள் பாலர் நாடக சபைகளில் அங்காளில் பெண்களைச் சேர்ப்பது வழக்கமில்லை. ஆண்களே பெண் வேடம் புனைந்து வந்தார்கள். பிரபலமாக விளங்கிய எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/49&oldid=1322580" இலிருந்து மீள்விக்கப்பட்டது