பக்கம்:நாடகக் கலை 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு 65 ஓரங்க காடகங்கள் பலவற்றைத் திருவாளர்கள் சி.ஆர். மயிலேறு, வி. சி. கோபாலரத்தினம், சு. குருசாமி, பெரியசாமித் தூரன், சிதம்பர சுப்பிரமணியம், கோமதி சுவாமிநாதன் போன்ற எழுத்தாள நண்பர்கள் எழுதி வெளியிட்டிருக்கிருர்கள். அவைகளில் பல காடகங்கள் இன்னும் மேடையில் அரங்கேறவில்லை. குழந்தைகளுக்கென்று சிறந்த நாடகம் எதுவும் இதுவரை நடிக்கப் பெறவில்லை. அந்த காளில் முழுதும் பாடல்களாக நாடகங்கள் இருந்த காலம் போய்விட்டது. சமுதாய நாடகங்கள் அதிகமாக நடத்தத் தொடங்கிய பிறகு, நாடகத்தில் பாட்டுக்கிருந்த முதன்மை குறைந்தது; கடிப்பு முதலிடம் பெற்றது. இப்போது நடைபெறும் நாடகங் களில் பாடல்கள் மிகக் குறைவு. மேடுைகளைப் போல் முழுவதும் பாடல்களைக் கொண்டே நாடகங்கள் கடை பெறலாம். ஆணுல், பாத்திரங்களே பாடினல் தான் கன்ருக இருக்கும். இன்றைய காளைப்போல இரவல் குரல் முறையெல்லாம் மேடைக்குச் சிறப்பைத் தாராது. நாடக நேரம் பண்டைய நாளில் நாடகங்கள் இரவு 10 மணிக் குத் தொடங்கி, விடிந்து சூரியன் உதிக்கும் வரை கடத்தப் பெற்றன. நான் நாடகத் துறைக்கு வந்த போது இராமாயணம் ஒன்றுதான் விடியும் வரை கடந்தது. மற்ற நாடகங்கள் எல்லாம் இரவு 9-30 மணிக்குத் தொடங்கி ஐந்து மணி நேரம் கடைபெற்று இரவு 2-30 மணிக்கு முடிவு பெறும். பிறகு இந்த நிலை மாறி நான்கு மணி நேரமாகக் குறைந்தது. தற்சமயம் பெரும்பாலான நாடகங்கள் மூன்றரை மணி நேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/67&oldid=1322600" இலிருந்து மீள்விக்கப்பட்டது