பக்கம்:நாடகக் கலை 1.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.34 காடகக் கலை பண்பறிந்து அழுத்தமாகவும் மென்மையாகவும் பேச வேண்டியது அவசியமாகும். மற்ருென்று : வார்த்தைகளை எப்போதும் தெளி வாகச் சொல்ல வேண்டும். அவலச் சுவை தோன்ற கடிக்கும்போது சிலநடிகையர் உண்மையாகவே அழுது விடுவார்கள். அழுதால் பேச்சுத் தெளிவாக வராது; அதுவே இயற்கை. ஆணுல், மேடையில் பொய்யாகத் தான் அழவேண்டும். அழுகை, நடிப்பாக இருந்தால் தான் பேச்சும் தெளிவாக இருக்கும். கோபம், ஆவேசம் எந்த உணர்ச்சியிலும் வார்த்தை தெளிவாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் கதைப்போக்குப் புரியாது போக நேரலாம். கடிப்பின் வெற்றி அடுத்தபடியாக நினைவாற்றல். இங்கேதான் சற்று விரிவாக விளக்க வேண்டியது என் கடமை. இப்போது உங்களுக்கு நல்ல நாடகக்காட்சி ஒன்றைக் காண்பிக்கப் போகிறேன். ஒரு தேயிலைத் தோட்டம். கோடை வெயில் கொளுத்துகிறது. தொழிலாளர்கள் பலர் வேலை செய்து கொண்டிருக்கிருர்கள். இவர்களிடையே நாடகத்தின் கதாநாயகன்; அவனும் இப்போது ஒரு தொழிலாளி. கல்ல சீமானுக வாழ்ந்தவன். கடத்தை தவறியதின் விளைவு, நாடு விட்டுப் பெண்டு பிள்ளைகளைப் பிரிந்து இறுதியில் தோட்டத் தொழிலாளியாக வந்துகிற்கிருன். அவன் கைகளிலே மண்வெட்டி, கண்கள் நீரைச சொரி கின்றன. வாழ்ந்த வாழ்வை எண்ணுகிருன். வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/85&oldid=1322623" இலிருந்து மீள்விக்கப்பட்டது