பக்கம்:நாடகக் கலை 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை 95 வது நாடகக் கலை மாநாடு நடந்தது. அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராய் இருந்து பணி புரிந்த உயர்திரு ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் மாகாட்டுக்குத் தலைமை தாங்கிர்ைகள். அன்றிரவு அவ்வையார் நாடகம் கடைபெற்றது. அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு ஆர். கே. சண்முகனர் அவர்கள் எனக்கு 'அவ்வை' என்று சிறப்புப் பட்டம் அளித்தார்கள். அந்தச் சிறப்புக்குரிய ஒளவையார் நாடகத்தில் கான் ஒளவையாராக அரங்கில் நடிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் சண்முகமாகவே இருந்து அவ்வையின் பாத்திரத்தைக் கண்காணித்து வரு கிறேன். கூன் முதுகு, பொக்கை வாய், கைக் கடுக்கம், தாடை அசைவு, முகத்தின் சுருக்கம், தளர்கடை, பெண்குரல் எல்லாவற் ை யும் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்கும். இவற்றில் எதை மறந்தாலும் அவ்வையாரின் வேடம் கலந்துவிடுமல்லவா? இவை மட்டுமா? அதே நேரத்தில் மேடையிலே திரை விழும் இடங்கள், ஒளி அமைத்திருக்கும் இடங்கள், ஒலிக்கருவி வைத்திருக்கும் இடங்கள், இன்னும் எத்தனையோ விஷயங்களை அவ்வையார் நினைவில் வைத்திருந்தால் அல்லவா சபையோர் காடகத்தைக் கண்டு ரசிக்கலாம்! எனக்கே ஒரு சமயத்தில் பெரிய அபாயம் ஏற்பட் டது. கடவுளின் அருட் செயலால் தப்பினேன். 1948-ல் சென்னை ஒற்றைவாடையில் அவ்வையார் நாடகம் தொடர்ந்து பல மாதங்கள் கடை பெற்றது; ஒரு நாள் காலஞ்சென்ற தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் தலைமை; அன்று பெருங் கூட்டம்; மேடையில் உழவனும் மனைவியும் அவ்வையாரோடு உரையாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/96&oldid=1322634" இலிருந்து மீள்விக்கப்பட்டது