பக்கம்:நாடகக் கலை 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

நடிகக் குழுவினருடைய-அனுபவங்களையும் வழங்கி

யுள்ளார்.

முன் தலைமுறையில் வாழ்ந்து மறைந்த, தன் தலை முறையில் தம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நடிக நடிகையர்களின் பெயர்களையும்-அவர்கள் வாழ்க்கை யில் சுவையுள்ள நிகழ்ச்சிகளையும் இந்நூலில் சேர்த்து, வருங்காலத் தலைமுறை நடிக-நடிகையர் அவர்களை மறந்துவிடாதிருக்க வழி செய்திருக்கிருர் ஆசிரியர் சண்முகம். இது, வளர்ந்து விட்டவர்களிடம் எளிதில் காண முடியாத உயர்ந்த பண்பாடு.

பொதுவாக, இந்நூல் நாடகக் கலையின் சரித்திர சாஸனம் எனலாம். பல்கலைக்கழகமொன்றில் நிகழ்த் திய சொற்பொழிவாக அமைந்திருக்கும் இந்நூலை, கல்லூரிகளில் பாடமாக்கில்ை, மாணவர்கள் பயன் பெறுவர். இது இலக்கியங்களோடு சேர்த்து எண்ணத் தக்க சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.

இவ்வளவு சிறந்த ஒரு நூலில் என் பெயரும் இடம்பெறும் அளவில் நான் ஒரு நடிககை இல்லாமற் போனதற்கு ஏங்குகின்றேன். இந்நூலாசிரியர் இன் னும் பல நூல்களை எழுதி மேலும் மேலும் புகழ்

பெறுவாராக!

25-8-87 )

ఉనా-5, f ம.பொ. சிவஞானம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/10&oldid=1322365" இலிருந்து மீள்விக்கப்பட்டது