பக்கம்:நாடகக் கலை 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

ஐயப்படாஅது அகத்த துனர்வாகத் தெய்வத் தோடு ஒப்பக் கொளல் ’ திருவள்ளுவரே கூறிவிட்ட்ார், அவன் தெய்வத்திற்கு ஒப்பானவன் என்று. அதற்கு மேல் தீர்ப்பேது?

நாடகாசிரியன் யார்?

நல்லவனும் கெட்டவனும் சேர்ந்து வாழும் உலகம் இது. நல்லவன் யார், கெட்டவன் யார் என் பதை நீங்களும் நானும் தெரிந்து கொள்வது எப்படி? அந்தப் புண்ணியத்தைத்தான் செய்கிருன் நாடகா சிரியன். நல்லவன் கெட்டவன் எல்லோருடைய அகத்தையும் திறந்து காட்டி அவர்கள் பொய் வேடத் தைக் கிழித்துச் சந்தி சிரிக்க வைக்கிருன்.

எனவே, நாடகாசிரியனுக்கு நடிகர்கள் பெரு மதிப்புத் தரவேண்டும். நடிக்கும்போது சந்தேகங்கள் தோன்றினுல் நாடகாசிரியனைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நாடகாசிரியனுடைய எண்ணப்படிதான் நடிக்க வேண்டும். நடிகனுக்குப் புதிய கற்பனைகள் ஏதாவது தோன்றக்கூடும். அதை நாடகாசிரியனிடம் கூறி 'இந்தக் காட்சியில் இப்படி நடிக்கலாமா? இந்தக் கட்டத்தில் இப்படிப் பேசலாமா?' என்று கேட்டுக் கொண்டு செய்ய வேண்டும். நடிகனுக்கு இந்தக் கட்டுப்பாட்டுணர்ச்சி மிகவும் அவசியம்; எவ்வளவு சிறந்த நடிகனுக இருந்தாலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடிக்கும் போதுதான் அவன் நடிப்பிலே மெருகு-கலையழகு இருக்கும்.

துண்ணிய நோக்கு

நடிப்புக்கலை பயிலும்போது வாழ்க்கையை உற்று நோக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/101&oldid=1322466" இலிருந்து மீள்விக்கப்பட்டது