பக்கம்:நாடகக் கலை 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மறுக்கப்படவில்லையே! வட மொழியிலும் தமிழ் மொழி யிலும் உள்ள நாடகங்களை திரைப்படங்களைப் புராணக் குப்பைகள் என்று கேலி செய்யும் பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லப்படுபவர்க்ள்கூட இந்த ஆங்கில பத்துக் கட்டளைகள்' படத்திற்கு பிரமாதமாக விமர்சனம் செய்து வரவேற்று வாழ்த்துக் கூறி ர்ைகளே!

எனவே, புராண இதிகாசங்கள் என்பதற்காகவே நாம் எந்த நாடகக் கதைகளையும் ஒதுக்க வேண்டிய தில்லை. அப்படி ஒதுக்கித் தள்ளத் தொடங்குவோ மால்ை நமக்குப் பழைய சிறப்பென்ருே வரலாற்றுப் பெருமையென்ருே சொல்லுவதற்கு ஒன்றும் இல்லாமற். போய்விடும் என்பதைப் பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

காந்தியடிகளுக்கு வழிகாட்டிய நாடகம்

இலட்சிய நாடகமாக நாம் போற்றும் ஹரிச் சந்திரன் இதிகாசக் கதைதான். அந்த ஹரிச்சந்திரன் நாடகம் சமுதாயத்திற்குத் தீமையையா செய்திருக் கிறது? எண்ணிப் பாருங்கள்.

கருணை வள்ளலான நமது மகாத்மா காந்தியடிகள் ஹரிச்சந்திரா நாடகந்தான் தமது வாழ்க்கையில் சத்திய நெறிப்படி நடக்கத் தூண்டியதென்று சுய சரிதையாகிய சத்திய சோதனை'யிலே எழுதியிருக் கிருர். அப்படியால்ை அந்த இதிகாச நாடகத்தின் சிறப்புக்கு வேறென்ன சான்று வேண்டும்? மகாத்மா காந்தியடிகளுக்குச் சத்தியத்தைப் போதிக்கும் சக்தி வாய்ந்திருக்கும் ஒரு நற்கலையை, நாடகக் கலையை, வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக வளர்ப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/130&oldid=1322501" இலிருந்து மீள்விக்கப்பட்டது