பக்கம்:நாடகக் கலை 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

நாட்டுக்கு நன்மை செய்வதாகுமா வென்பதை எண்ணிப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.

நாடகக் கலை அறிவை வளர்ப்பதாகவும் உணர்ச்சி களைத் தட்டியெழுப்பி நல்ல செயல்களைத் தூண்டுவ தாகவுமே இருக்கவேண்டும்.

இளங்கோ தந்த செல்வம்

நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் ஓர் அருமை யான நாடகக் காப்பியம். அற்புதமான பாத்திரப் படைப்புகள். அல்வழிப்பட்ட அரசை அழித்தொழிப் பேன் என்று வீறிட்டெழுந்து நின்ற ஒரு வீராங் கனையின் வரலாறு. தமிழ் மூவேந்தர்களின் சிறப்புக் கெல்லாம் சான்ருக விளங்கும் செந்தமிழ்க் காப்பியம்.

சிலப்பதிகாரம் நமக்குக் கிடைத்திராவிட்டால்

தமிழ் மக்கள் இசையிலும், நடனத்திலும் நாடகத்திலும் சிறந்து விளங்கிய செய்திகள் மறைந்தே போயிருக்கும்.

தாய்க்குலம் எழுச்சி பெற்று நின்ருல் கொடுங் கோலையும் வீழ்த்திச் செங்கோலை உயர்த்த முடியும், செம்மையைக் காக்க முடியும் எனச் சிலப்பதிகாரத்தின் வாயிலாக உலகுக்கு உணர்த்துகிருர் இளங்கோவடிகள்.

எழுச்சி பெற்ற அந்த வீரக் கண்ணகி மெய்யிற் பொடியோடும், விரித்த கருங்குழலோடும், கையில் ஒற்றைத் தனிச் சிலம்போடும், கண்ணிரோடும் வந்து பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக் களத்திலே நிற்கிருள். தன் கணவன் கள்வன் அல்லன்' என்று வாதாடுகிருள். நீதி வழுவிய நெடுஞ்செழியன் உண்மை யுணர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/131&oldid=1322502" இலிருந்து மீள்விக்கப்பட்டது