பக்கம்:நாடகக் கலை 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

காப்பிய முழுவதும் கொடுமை க்கா ரியாக த் திகழ்ந்த கைகேயியை, எல்லோராலும் வெறுக்கப்பட்ட கைகேயியை, அவளால் கொடுமைக்காளான பாத்திர மாகிய இராமன் தன் திருவாயாலேயே தெய்வம் என்று கூற எப்படி உயர்த்தி விட்டார் கம்பர்! இஃதல்லவா நாடகப் பண்பின் உச்ச நிலை.

பாரதம் கூறும் பண்பு

மகா பாரதக் கதையை எடுத்துப் பாருங்கள். பஞ்ச பாண்டவர்களின் அருமைத் தாய் குந்திதேவியும் அவளுடைய முதற் புதல்வனும், பாண்டவர்களில் மூத்தவனுமான கர்ணனும் சந்திக்கிருர்களே; அந்தக் கட்டத்தைப் போல் ஒரு அற்புதக் காட்சியை உலக நாடக இலக்கியங்களிலே நாம் பார்க்க முடியுமா? இதை நான் சொல்லவில்லை, மேனுட்டு நாடகாசிரியர் களே கூறுகிருர்கள். கர்ணனுடைய பாத்திரப் படைப் பும், குந்தி தேவியின் பாத்திரப் படைப்பும் நாம் இனிப் புதிதாகப் படைக்கக் கூடியதா?

குந்தியைத் தன் தாயென்று அறிந்ததும் கர்ணன் ஆனந்தக் கூத்தாடுகிருன். தாயின் காலடியில் வீழ்ந்து கண்ணிர் பெருக்குகிருன். அதே நேரத்தில் அவன் தாய் ஐவரோடு நீயும் சேர்ந்து அறுவராக இருக் கலாம்; துரியோதனனை விட்டு வந்து விடு' என்கிருள். அங்கேதான் கர்ணனின் மனநிலை உயர்ந்து விளங்கு கிறது.

"தாயே! நானும் துரியோதனனின் பத்தினி பானுமதியும் ஒரு நாள் தனியே சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது துரியோதனன் வந்தான். நான் வாசல் பக்கம் முதுகைத் திருப்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/134&oldid=1322505" இலிருந்து மீள்விக்கப்பட்டது