பக்கம்:நாடகக் கலை 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

ஒரு நல்ல நாடகம் எப்படி இருக்கவேண்டும் என அறிஞர்கள் விரும்புகிருர்கள்? இதற்கொரு விளக்கம் தருகிறேன்.

எது நல்ல நாடகம்?

பலவிதமான மைேதத்துவ நிலைகளை, வாழ்க் கையில் பல சந்தர்ப்பங்களில் நிகழக்கூடிய மனப் போராட்டத்தின் வெற்றி தோல்விகளை சீரிய நடிப் பின் மூலம் சித்திரித்துக் காட்டுவது; கலைச் சிறப்புக்கள் நிறைந்த கருத்தோவியமாகக் காட்சிகளை அமைப்பது; பார்ப்பவர்கள் புலன்களெல் லாம் ஒடுங்கித் தம்மை மறந்த நிலையில் ரசிக்குமாறு கதையை எழுதுவது; இம்மூன்று சிறப்புக்களும் ஒரு நல்ல நாடகத்திற்கு வேண்டும்.

நல்ல நாடகம் என்பதற்குரிய இலக்கணத்தைப் பற்றி விளக்கும்போது தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய கருத்துரை இது. ஒரு 'சுக்குமில்லை!

சென்னையில் புதிய நாடகமொன்று அரங்கேற்றப் பட்டது. அந்த நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. நாடகத்தைப் பார்த்துத் திரும்பிய எனது நண்பர் ஒருவரைச் சநதித்தேன். அவர் மலையாளி;

'நாடகம் எப்படியிருந்தது என்று கேட்டேன். உடனே அவர் முகத்தைச் சுளித்தார். வெறுப்புடன் "அதில் ஒரு சுக்கு மில்லா' என்ருர்.

இது மலையாளத்தில் சாதாரணமாகச் சொல்லும் ஒரு வார்த்தை; நிகழ்ச்சியில் ஏதும் சுவை இல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/137&oldid=1322508" இலிருந்து மீள்விக்கப்பட்டது