பக்கம்:நாடகக் கலை 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

யானுல் ஒரு சுக்கு மில்லா என்றுதான் குறிப்பது வழக்கம்.

இந்தப் பழஞ் சொல்லிலே ஒரு சீரிய பொருள் புதைந்து கிடக்கிறது. சுக்கு நோய்களுக்குரிய மருந்துப் பொருளல்லவா? எனவே, ஒரு சுக்கும் இல்லையென்ருல் மக்கள் நோய்க்குரிய மருந்து (கருத்து) எதுவும் அந்த நாடகத்திலே இல்லை என்பது பொருள்.

உள்ளத்தை உயர்த்த வேண்டும்

நாடகம் வெறும் பொழுது போக்குக் கலையன்று; புன்மைகளைப் போக்கவும் அதைப் பயன்படுத்த வேண்டும். திரு. வி. க. அவர்களின் கருத்துரை இதைத்தான் வலியுறுத்துகின்றது.

எந்த நாடகத்திலும் மக்களுக்குப் பயன்படும் ஒரு நல்ல கருத்து இருக்கவேண்டும். புராணம், இதிகாசம், சரித்திரம், சமுதாயம்-எந்த அடிப் படையைக் கொண்டு நாடகம் எழுதப்பட்டாலும், ஒன்று நான் முன்பு சொன்னது போல் மனிதப் பண்பை உயர்த்துவதாக இருக்க வேண்டும், அல்லது சமுதாயத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும்.

"ஒரு நாடகத்தைப் பார்க்க வரும் மக்கள் நாடகம் முடிந்து வீடு திரும்பும்போது வந்தபோதிருந்ததை விட உள்ளத்தில் சிறிதளவாவது உயர்வான எண்ணங்களைக்கொண்டு செல்லவேண்டும். அதுதான் நல்ல நாடகம்.” என்று நமது ராஜாஜி அவர்கள் 'இராஜராஜ சோழன்’ நாடகத்திற்கு வாழ்த்துரை வழங்கியபோது குறிப்பிட்டார். திரு. வி. க. அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/138&oldid=1322509" இலிருந்து மீள்விக்கப்பட்டது