பக்கம்:நாடகக் கலை 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

நமது கருத்துரையில் குறிப்பட்ட மூன்று சிறப்புக்களும் இருந்தால்தான் ராஜாஜி அவர்கள் சொல்லியது போல் பார்ப்பவர்கள் உள்ளத்தில் உயர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

இவ்விரு பெரியார்களுடைய அறிவுரைகளையும் என் அனுபவத்தையும் துணைகொண்டு பார்க்கும் போது நல்ல நாடகம்' என்ருல் அந்த நாடகத்தில் மக்களுக்குத் தேவையான கருத்து, அக்கருத்தை உள்ளத்தில் பதியும் வண்ணம் அமைத்துள்ள காட்சிக் கட்டுக்கோப்பு; இவற்றேடு கதைப் பொருளை நன்கு வெளிப்படுத்தும் நடிகர்களும் அமையவேண்டும். இந்த மூன்று அம்சங்களும் சேரும்போதுதான் நல்ல நாடகம் மக்களுக்குக் கிடைக்கிறது.

நாடகத்தால் நாட்டுப் புரட்சி

கண்ணுல் காணும்போது ஏற்படும் உணர்ச்சி படிக்கும்பொழுதோ கேட்கும்பொழுதோ ஏற்படுவ தில்லை. மனித சமூகத்தின் நன்மைக்குரிய விஷயங் களை நெஞ்சில் பதியவைப்பதற்கு நாடகத்தைவிடச் சிறந்த சாதனம் கிடையாது. பொது நன்மைக்கான கருத்துக்களைக் கட்டுரையாகவோ, கதையாகவோ சொல்லுவதைவிட, இசையோடு பாடுவதைவிட நாடகமாக நடித்துக் காட்டுவது நல்ல பயனைத் தரும்.

மேல் நாடுகளில் நடைபெற்ற அநேக அரசியல் புரட்சிகளுக்கு அந்த நாட்டு நாடக மேடைகள் பேரு தவியாக இருந்திருக்கின்றன. எங்கள் நாடகக் குழுவில் நாங்கள் நடித்துவந்த கதரின் வெற்றி, தேச பக்தி போன்ற நாடகங்களும், கவியின் கனவு, இன்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/139&oldid=1322510" இலிருந்து மீள்விக்கப்பட்டது