பக்கம்:நாடகக் கலை 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

உள்ளத்தில் தவருன விஷயங்கள் வெகு சுலபமாகப் புகுந்துவிடும். எனவே, அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்.

இளம் பிள்ளைகளுக்குரிய நாடகம் எது? வீட்டில் தாய்தந்தை முதலியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்; பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் களிடத்தில் எப்படிப் பணிவோடு மரியாதையோடு பழகவேண்டும்; உடலையும் உடைகளையும் எவ்விதம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்; பள்ளிக்கு வரும்போது வீதிகளிலே வம்பு பேசாமல் எவ்வாறு ஓரங்களிலே நடந்து வரவேண்டும்; என்பனவற்றை யெல்லாம் நாடகங்களின் மூலம் போதிக்கலாம்.

மகாகவி பாரதி ஓடி விளையாடு பாப்பா' என்னும் பாட்டிலே குழந்தைகளுக்கு எவ்வளவு அருமையாக விஷயங்களைச் சொல்லுகிருர்?.....அதையேதான் நாட கத்திலும் சொல்லவேண்டும்.

உயிர்களிடத்தில் அன்பு; உறுதியான நெஞ்சு: தெய்வபக்தி; உன்னதமான உயர்ந்த எண்ணங்கள் : இவற்றையெல்லாம் நாடகத்தின் மூலம் போதிக்க வேண்டும்.

தாய் மொழிப்பற்று; தேசபக்தி; தீமைகளை எதிர்த்துப் போராடும் உணர்ச்சி இவைகளெல்லாம் நம் குழந்தைகளுக்கு இளம்பருவத்திலேயே உண்டாக வேண்டும். நல்ல நாடகங்களின் வாயிலாக இவற் றைச் சுலபமாகப் பெறலாம். காவியம் தந்த ஓவியம்

ஒரு சிறுகதை சொல்லுகிறேன் கேளுங்கள். நல்ல கதை- :

ஓர் ஊரில் ஓர் இளைஞன் இருந்தான். அவ னுக்கு இருபது வயது. அந்த இளைஞனுடைய தாயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/147&oldid=1322519" இலிருந்து மீள்விக்கப்பட்டது