பக்கம்:நாடகக் கலை 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

நல்லதைவிடத் தீயதைத்தான் மனித மனம் விரை வில் ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது' என ஒரு அறிஞர் கூறுகிருர். ஆகவே, பொழுதுபோக்கு என்ற பெயரால் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் மக்களின் நலன் கருதியே வளரவேண்டும்.

இறுதியாக ஒன்று கூறுகிறேன். அரசியல் கருத் துக்களும் விஞ்ஞான உண்மைக்ளும் வளர்ந்து வரு கின்றன. மனிதன் சந்திர மண்டலத்தைத் தொட்டு விட்ட அளவுக்கு உயர்ந்திருக்கிருன். உண்மைதான். மனித மனம் மிகப் பெரிதாக விரிவடைந்திருக்கிறது. அறிவு வானை அளந்துவிட்டது. ஆல்ை, இதயம் மட்டும் விரிவடையவில்லை. சுருங்கிக் கொண்டே போகிறது.

அன்பு, அறம் இவற்றையெல்லாம் நமது இதயம் ஏற்க மறுக்கிறது. அன்பினுலும் அறத்திலுைம், இவற்றையெல்லாம்விட மேலாக அருளிலுைம் மனித இதயம் வளர்ந்து பண்படாவிட்டால், வளம்பெரு விட்டால், மனிதன் மனிதனுக வாழமுடியாது என் பதை உறுதியாகச் சொல்லுவேன். அறிவியல் வளர்ச்சியாலும் விஞ்ஞான வளர்ச்சியாலும் மனிதன் கண்ட உண்மைகளை மனித குலத்திற்குப் பயன்படுத்த அன்பும், அறிவும், அருளும், அவன் இதயத்திலே இடம் பெறவேண்டும். எந்தச் சமயமாயிருந்தாலும் எந்த மதமாயிருந்தாலும் இந்த உண்மையைத் தான் போதிக்கிறது.

நாடகசால்ை நல்ல கலாசாலை

எனவே, சமய உண்மைகள் நாடகங்களின் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டுமென்பதை அழுத்தமாகச் சொல்லுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/153&oldid=1322525" இலிருந்து மீள்விக்கப்பட்டது