பக்கம்:நாடகக் கலை 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறவஞ்சி நாடகம்

குறவஞ்சி நாடகம் என்னும் ஒருவகை நாடகம் தமிழ் நாட்டியக் கலைஞர்களிடையே வளர்ந்து வந்தது. இந்தக் கதை, ஓர் அரசன் அல்லது தெய்வம் பவனி வரும்போது அவரைக் கண்ட ஒரு பெண்மணி காதல் கொண்டு வருந்துவாள். குறத்தி வந்து குறி பார்த்து 'நீ அவரையே மணப்பாய்' என்று ஆறுதல் கூறுவாள். பிறகு அந்தப் பெண்மணி தான் காதல் கொண்டவரை அவ்வாறே மணம் புரிவாள். அப்புறம், காணாமற் போன குறத்தியைத் தேடி அவள் கணவனான குறவன் வருவான். இருவரும் ஆடிப்பாடிச் செல்வார்கள். அநேகமாக எல்லாக் குறவஞ்சி நாடகங்களிலும் இதுவேதான் கதை. குற்றாலக் குறவஞ்சி, விராலிமலைக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, இவ்வாறு எழுதப் பெற்றுள்ள பல குறவஞ்சி நாடகங்களில் சிறப்பு வாய்ந்த பாடல்களைக் கொண்ட இலக்கியமாகக் கருதப்படுவது திருக்குற்றாலக் குறவஞ்சி யாகும். இதனை ஆடலும், பாடலும் கொண்ட நாட் டிய நாடகமாகவே நமது நடனமணிகள் ஆடி வருகிறார்கள். இந்த பெருமைக்குரிய குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்ப கவிராயர்.

இன்னும், நாடக அலங்காரம், வாசகப்பா, சபா, பள்ளு முதலான பெயர்களிலும் நாடகங்கள் இருந்தனவென்று தெரிகிறது.

மனோன்மணியம்

1891-ல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் 'மனோன்மணீயம்' என்னும் அற்புதமான நாடகத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/36&oldid=1540278" இலிருந்து மீள்விக்கப்பட்டது