பக்கம்:நாடகக் கலை 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

வந்து நிற்கிருன். அவன் கைகளிலே மண்வெட்டி: கண்கள் நீரைச் சொரிகின்றன. வாழ்ந்த வாழ்வை எண்ணுகிருன். வழி தவறிச் சென்ற தனது மந்த மதியையும் நொந்து கொள்ளுகிருன்.

இந்த நிலையிலே வருகிருன் கண்காணிக்கும் மேஸ்திரி. பார்க்கிருன் அழுது கொண்டிருக்கும் தொழிலாளியை. வந்து விட்டது கோபம்!......கையி லிருந்த சாட்டையால் கதா நாயகனைக் கண் மூக்குத் தெரியாமல் அடிக்கிருன். வீறிட்டலறுகிருன் கதா நாயகன். வெறி கொண்டவன்போல் மேலும் வீசு கிருன் சாட்டையைக் கண் காணிப்பவன். இந்தச் சந்தர்ப்பத்தில் பழைய செருப்பொன்று பறந்து வந்து கண்காணிப்பவரின் முகத்திலே விளையாடி விழுகிறது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் கண்காணி. எதிரே சபையில் சலசலப்பு-கம்பீரமான ஒரு குரல் 'நிறுத் துடா அயோக்கியப் பயலே' என்றது.

நடந்தது இதுதான். - கதைப் போக்கிலும் உயர்ந்த நடிப்பிலும் உள்ளத்தைப் பறி கொடுத்துத் தன்னை மறந்திருநத ஒரு பெரிய மனிதர் மேடையில் நடப்பதை நாடகமாக எண்ணவில்லை. கதாநாயகன் மேல் அனுதாபங் கொண்டார். தன் காற்செருப்பைக் கழற்றி வீசினர் கண்காணி மேல். -

அருகிலிருந்த நண்பர்கள் அந்தப் பெரிய மனி தருக்கு உண்மையை உணர்த்தினர்கள். நடிகனிடம் பெரு மதிப்புக் கொண்ட வேறு சிலர் அவரது தவற்றைக் கண்டிக்க முற்பட்டார்கள். உடனே மேடை மீது கண்காணியாக நடித்த நடிகர் பணிவோடும் புன்னகையோடும்,............

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/85&oldid=1322449" இலிருந்து மீள்விக்கப்பட்டது