பக்கம்:நாடகக் கலை 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

படித்தான். நடிகனின் திறமையைத்தான் அவ்வாறு குறிப்பிடுகிருர்கள். உண்மையில் நடிகன் பாத்திர மாகத் தன்னை எண்ணிக்கொள்ளுகிருனே தவிர, பாத் திரமாக மாறிவிடுவதில்லை. அப்படி மாறிவிடவும்

கூடாது.

நடிகன் மேடையில் நடிப்பதையே மறந்து, தான் புனைந்துள்ள பாத்திரமாகவே மாறிவிடும் போதுதான் முழு வெற்றி பெறுகிருன் என்று பலரும் நினைக்கிருர் கள். உண்மை அப்படியன்று. பாத்திரமாக மாறுவது என்பதெல்லாம் வெயிலில் மண்டை பிளந்து விட் டது' என்று சொல்லுவது போல் வெறும் வார்த்தை மயக்கமே தவிர வேருென்றுமில்லை......

நடிகன் பாத்திரத்தின் குண இயல்புகளை நன்ருகத் தெரிந்துகொண்டு பாத்திரத்துடன் ஒன்றி நடிக்க வேண்டும். ஆனல், நாம் நடிக்கிருேம்’ என்ற உணர்வு-நினைவு ஒவ்வொரு விநாடியும் நடிகனின் கவ னத்தில் இருக்கவும் வேண்டும். அப்போதுதான் அவன் தன் நடிப்பிலே வெற்றி பெறுவான். தன்னை மறவாமல் பாத்திரத்தோடு இணைந்து நடிக்கும் வரை யில்தான் அதை நடிப்பு என்று சொல்ல முடியும். தன்னை மறந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பாத் திரமாகவே மாறி நினைவிழந்து நிற்கும் நிலையை நடிப்பு என்று சொல்ல முடியாது.

மறந்தும் மறவாத நிலை

நடிகன் தனக்கு எதிரே வீற்றிருக்கும் சபையின்

சுவை உணர்ச்சியைத் தெரிந்துகொள்ள வேண்டும்;

மேடையிலுள்ள இதர அமைப்புகளையும் நினைவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/89&oldid=1322453" இலிருந்து மீள்விக்கப்பட்டது