பக்கம்:நாடகக் கலை 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

இவைதாம். இவற்றில் எதுவும் உண்மை இல்லை. பாத்திரமாக நின்று இவற்றை எல்லாம் மலையாகவும் கடலாகவும், மலர்ப் பூங்காவாகவும், மணிமண்டப மாகவும் எண்ணிக் கொள்ளும் அதே நேரத்தில் நடிகன் தானுகவும் நின்று இவையனைத்தும் பலகை, சட்டம், அட்டை, துணி இவற்ருல் செய்யப்பட்டவை என்பதையும் நினைவில் ைவ த் து க் கொள்ள வேண்டும். தவறினுல் எல்லாம் வெட்ட வெளிச்ச மாகிவிடும். அரண்மனை, பூங்கா எல்லாம் ஆட்டம் கண்டுவிடும்.

நடிகன் தன்னை மறந்த நிலையில் கொஞ்சம் விலகித் திரை விழும் இடத்தில் நின்றுவிட்டால் அவன் கதி என்ன ஆவது?

உணர்ச்சி வசப்பட்ட ஒரு நடிகன் ஐயோ, தலை விதியே' என்று தலையில் அடித்துக் கொள்ளும்போது தலையிலிருப்பது பொய்ச் சிகை" என்பதை மறந்து ஓங்கியடித்துவிட்டால் அடுத்த வி நா டி அந்தத் தலையின் நிலை-டோபா'வின் நிலை என்னவாகும் ?

வீரச்சுவை ததும்ப நடிக்கும் வேகத்தில் நடிகன் மீசையில் கை வைத்து ஒட்டு மீசையை முரட்டுத் தனமாய் முறுக்கத் தொடங்கி விட்டால், மீசை கையோடு வந்துவிடுமல்லவா? இப்படித்தான் ஒவ் வொன்றும். இவை மட்டுமல்ல; அரங்கில் ஒத்திகைப் படி நிற்கவேண்டிய இடங்கள் எப்போதும் நடிகனின் கவனத்தில் இருக்க வேண்டும். பல்லாயிரக்கணக் கான மக்கள் கண்டுகளிக்கும் இன்றையத் திறந்தவெளி அரங்குகளில் ஒலிபெருக்கியின் உதவியை நடிகன் கவனத்தில் வைத்துக்கொண்டு அதற்கேற்பக் குரலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/91&oldid=1322455" இலிருந்து மீள்விக்கப்பட்டது