பக்கம்:நாடகக் கலை 2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

ஒருவர் வருகிருர். கொஞ்சம் ஆராயும் தன்மைகொண் டவர். இந்த யானை மிகவும் நன்ருயிருக்கிறதே!... இது எந்த மரத்தால் செய்யப்பட்டது? என்று கேட் கிருர். இப்போது அவரது கேள்வியால் யானை மீண்டும் மரமாகிவிட்டது. யானையில் மறைந்திருந்த மரம் வெளிவந்து விட்டது.

மரம் யானையாகவும், பூனையாகவும், மேசையாக வும், கட்டிலாகவும், நாற்காலியாகவும் பல்வேறு உருவங்களில் காட்சியளித்தாலும் அவற்றிலெல்லாம் மரம் என்ற மூலப் பொருள் மறைந்து கிடப்பதை நாம் அறிவோம். அதைப்போலவே கண்ணனுகவும், கருப் பகைவும், அரசனுகவும், ஆண்டியாகவும் எத்தனை எத்தனை வேறுபட்ட பாத்திரங்களில் நடிகன் தோன்றி லுைம் எந்தச் சமயத்திலும் அவன் அப்பாத்திரத்தி னுள்ளே மறைந்து நிற்கிருன் என்பது உண்மை.

உலகில் பற்றில்லாமல் உலகிலே வாழும் யோகி களை, முனிவர்களைக் குறிப்பிடும்போது தாமரையிலை நீர்போல் பற்றற்று வாழ்கிருர்’ என்று சொல்லுகிருர் களல்லவா? அதைப்போல் பாத்திரத்துடன் ஒன்று பட்டு நிற்கும் நடிகனையும், தாமரையிலை நீர்த்துளி போல் பாத்திரத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும நிற் பவன்' என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆம்; ஆதாரமாக இருக்கும் தாமரை இலையிலிருந்து கீழே உருண்டு விழுந்தால் நீர்த்துளி உருக்குலைந்து போகுமல்லவா? நடிகனை ஆதாரமாகக் கொண்டு நடமாடும பாத்திரமும் அப்படித்தான். நடிகனை விட்டு விலகினல் அதாவது நினைவிழந்து நின்ருல் பாத்திரம் உடைந்து சிதறுண்டு போகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/93&oldid=1322457" இலிருந்து மீள்விக்கப்பட்டது