பக்கம்:நாடகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o கருணைக்கு நிலவாக, கடமைக்குக் கதிராக, நின் செங்கோல் நிலைத்து வாழ்க! முன்னைப் புகழுக்கு இருப்பாக பின்னைப் பெருமைக்கு விளக்காக, நின் கொடையும் குஞ்சரமும் நீடு வாழ்க! எனக் கூத்தர் வாழ்த்தினர். திருமந்திர நாயகம் முன் மொழிந்தனன். திரு: வேந்தர் வேந்தே, தங்கள் திருமுன்னிலைக்குத் தலைக் காட்டுத் துாது வந்திருக்கிறது. துரது: தமிழுக்கும் வேந்துக்கும் தலை வணங்குகின்றேன்; எங்கள் மன்னர் பல்லாயிரம் பல்லாயிரம் நல் வாழ்த்துக்கள் விடுத்துள்ளார். அரசர் : நன்றி... துாது : தலைக்காட்டு அரசுக்கு ஒரு தூண் எங்கள் பரம்பரை! நுளம்பபாடி கடம்பன் என்பார் எம்மை! கூத் : இப்போது கொண்டு வந்த என்னவோ? செய்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/10&oldid=781487" இலிருந்து மீள்விக்கப்பட்டது