பக்கம்:நாடகங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 எழுகிருர். அந்த தாளக் கட்டுக்கு ஆட ஆரம்பிக்கிருர். ஆட்டத்தின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க கரைந்த கோயில் களும் கோபுரங்களும் மறுபடியும் முன் போல கூடி வருகின்றன! தேவ கணங் களெல்லாம் ஆட ஆரம்பிக்கின்றனர். மீனுட்சியின் படை வரிசையும் சிவ தாண்டவத்திற்கு ஒத்து தங்களை யறியாமலே - ைக யி ரு ந் த ஆயுதங் களோடு ஆடுகிருர்கள். மீனுட்சியும் சிவனின் ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து - ஆரம்பிக்கிருள். ஆடி ஆடி ஆட்டத்தின் உச்சத்தில் சிவனும் மீளுட்சியும் நெருங்கி விடுகின்றனர். ஆடலின் முடிவில் சிவன் மீனாட்சியைப் பார்த்து ஒரு புன்னகையை சிந்துகிரு.ர். அவளுக்கு நாணமாகிறது. அவளுக்கு மூன்ருவது ஸ்தானம் மறைகிறது. வெட்கத்தால் தோழியின் மேலாக்கைப் பறித்து தன் மார்பகத்தை மூடிக் கொள்கிருள்! அவள் கண்கள் நிலம் நோக்குகின்றன. சிவன் வைத்த விழி வாங்காமல் அவளைப் பார்த்து பரவசத்தோடு நிற்கிருன். மீனுட்சி வெட்கம் தாளாமல் தன் தோழிக்குப் பின் சென்று மறைந்து கொள்கிருள்.) தோழி : தலை குனிந்து அறியாத எங்கள் தலைவியை நான வைத்த ஆணவக்காரனே நீ யார்! சிவன் : (சிரித்த படி) என்னை சித்தனென்பார்கள்! பித்தனென் பார்கள்! சிவன் என்பாரும் உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/136&oldid=781566" இலிருந்து மீள்விக்கப்பட்டது