பக்கம்:நாடகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி எண். 1 மதுரை ரத வீதி மதுரா நகரத்து ராஜகோபுரம் ஒன்றிலிருந்து கொட்டாரத்து யானே முரசு ஒலித்து வருகிறது. அதன் பிடர்த்தலையில் இருந்த திருமந்திர ஓலை நாயகம், யானையை ஒரு முக்கூட்டில் நிறுத்தி ஒலையைப் படிக்கிருன். மதுரைப் பெருமக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான அறிவிப்பு. நிலவின் குலத்தோன்றல், வேம்பார மார்பன், மீனவன், வீரபாண்டியன், மன்னர் மன்னன் மலேயத்துவஜன் வருகிற பெளர்ணமித் திருநாளில் 100வது அஸ்வமேத யாகத்துக்கு நாள் குறித்திருக்கிரு.ர். போர் வேள்விக்குப் புறப்படும் புரவிக்கு வரிசை கொடுத்து, உறவாகும் வேந்தர்க் கெல்லாம் தென்பாண்டிப்பேரவையில் இடமுண்டு. எதிர்ப்பாருக்கு படுகளமும் கழுமரமும் பரிசாகும். இதுகேட்ட சாரணர்கள் தங்கள் தங்கள் அரசுக்கு அறிவிக்க. இதுபடித்தான் திருமந்திர ஒலைநாயகம். அரசப் பிரகடனத்தை கேட்ட மதுரை மக்கள் முகத்திலே மகிழ்ச்சி பொங்கு கிறது. அவர்களில்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/82&oldid=781742" இலிருந்து மீள்விக்கப்பட்டது