பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழில் ஒரு துறையில் நூல்களே இல்லையென்றால் அறிஞர்கள் அத் துறையில் கவனம் செலுத்தி நூல்களைப் படைக்க வேண்டும். அதற்கு மாறாகத் தமிழில் ஒன்றுமே இல்லை என்று எப்போதும் புலம்பிக் கொண்டு இருக்கக்கூடாது. அவ்வாறு கூறுவோர் ‘பெற்ற தாய்க்கு உடை இல்லை’ என்று சொல்வதற்குச் சமமாவர். ‘தாய்க்கு உடை இல்லை’ என்றால் முதலில் வெட்கப்பட வேண்டியவன் மகனாவான். அதற்கு மாறாக அவன் ஊரெல்லாம் சொல்லித் திரிவது இழிந்த செயலாகும். சம்பந்தனார் தமிழில் நல்ல நாடகங்கள் இல்லை என்று வருந்தியதோடு நில்லாமல், நல்ல நாடகங்களைப் படைத்தார். இப்பொருண்மையை விளக்க பம்மல் சம்பந்தனார் இந்நூலில் ஒரு கதையைக் கூறுகிறார். அக் கதை வருமாறு:

தெனாலிராமனிடம் ஒருவன் வந்து உன் தந்தைக்கு நாளை ‘சிரார்த்தம்’ என்று கூற, தெனாலிராமன், ‘அப்படியானால் நீதான் சிரார்த்தம் செய்ய வேண்டும்’ என்று கூறினான். ‘உன்னுடைய தந்தைக்கு நான் ஏன் சிரார்த்தம் செய்ய வேண்டும்?’ என்று கேட்க, அதற்குத் தெனாலிராமன் ‘நீதானே எனக்கு நினைவூட்டினாய்; எனவே நீதான் செய்ய வேண்டும்’ என்று பதில் கூறினான். இவ்வாறு தமிழில் நல்ல நாடகங்கள் இல்லை என்று குறை கூறுவோர், அவ்வாறு கூறுவதை விடுத்து நல்ல நாடகங்களை எழுத முற்பட வேண்டும் என்று பம்மல் சம்பந்தனார் இந் நூலில் கூறியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார் நாடகக் கதையை எழுதும் முறை ஒரு புதுமையானதாகும். பம்மல் சம்பந்தனார் நாடகக் கதையை மனத்தில் அமைத்துக்கொண்ட பின்னர், நோட்டுத்தாளில் பென்சிலால் ‘ஏ’ என்ற அரசனுக்கு ‘பி’ என்று ஒரு மகன் இருந்தான். ‘சி’ என்ற அரசனுக்கு, ‘டி', ‘இ’ என்று இரு புதல்வியர் இருந்தனர். ‘ஏ’ என்ற அரசன் தன் மகனுக்குத் திருமணம் முடிக்க அமைச்சருடன் ஆலோசனை செய்து முடித்தபின் ‘எஃப்’ என்ற தூதுவனை ‘சி’ எனும் அரசனிடம் அனுப்பினான்.

இவ்வாறு கதை அமைப்பை எழுதிக்கொண்ட பின், புதிதாக ஏதாவது தோன்றினால் கதைப்போக்கை மாற்றி எழுதி விடுவதும் உண்டு. நாடகத்திற்கு ஏற்றவாறு காட்சிகளைப் பிரித்தபின்னர் ஏ, பி, சி, டி, இ, எஃப் முதலிய நாடகப் பாத்திரங்களுக்கு அவரவர் பண்புகளுக்கு ஏற்றவாறு பெயர்களைச் சூட்டுவார்.

பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகங்களில் ஒன்று ‘தாசிப்பெண்’. இந் நாடகத்தை எழுதி அரங்கேற்றிய பின் விமர்சகர் ஒருவர், ‘சம்பந்தனாருக்குத் தாசிகளிடம் நிரம்ப அனுபவம் இருக்கும் போலும்; எனவேதான் அவருடைய இந் நாடகத்தில் மிக நுணுக்கமாக தாசிகளைப் பற்றி எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டார்.

பம்மல் சம்பந்தனார், அவருடைய விமர்சனத்தை மறுத்து இந் நூலில் எழுதியுள்ளார்.

ஓர் ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவனுடன் அமைச்சரும் துறவியும் இருந்தனர். அமைச்சருக்குத் துறவிமேல்