இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
அங்கே நிறையப் பழங்களும், கொட்டைகளும் கிடைத்தன. இரண்டு மூன்று நாட்கள் இப்படி விளையாடுவது இன்பமாக இருந்தது.
ஆனால் இந்த வாழ்க்கையில் அதற்கு விரைவில் அலுப்புத் தட்டிவிட்டது. சாப்பிடுவதும், தூங்கு வதுமாக இருக்கும் வாழ்க்கை அதற்குப் பிடிக்க வில்லை. அதனால் ஒரு நாள் அதிகாலையில் அது அந்தக் காட்டில் ஆட்சி செய்யும் சிங்கராஜாவிடம் சென்றது. போகும்போது தனது சர்க்கஸ் உடை களை மாட்டிக் கொண்டது. வெள்ளி, தங்கப் பதக் கங்களை நெஞ்சுக்கு நேராகக் குத்திவைத்துக் கொண்டது. முகத்திலே சிவப்பு, மஞ்சள், கறுப்பு ஆகிய எல்லாச் சாயங்களையும் நன்றாகப் பூசி அழகு செய்துகொண்டது. த லை யி ல் தொப்பியை வைத்துக் கொண்டு நேராகச் சிங்கத்தின் குகை