பக்கம்:நான்மணிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

21

நான்மணிக்கடிகை 21

மையாற் றளிர்க்கும் மலர்க்கண் - மாவிருள் நெய்யாற் றளிர்க்கும் நிமிர்சுடர் - பெய்யல் முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார்

வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

36

நகையினிது நட்டார் நடுவட் பொருளின்

தொகையினிது தொட்டு வழங்கின்-வகையுடைப்
பெண்ணினிது பேணி வழிபடிற் பண்ணினிது

பாடல் உணர்வா ரகத்து.

37

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்

இரப்பவர்க்குச் செல்சார் ஒன்றிவார் - பரப்பமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்

செய்யாமை செல்சார் உயிர்க்கு.

38

கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக் கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப வமைந்தார் முனியாதார்

முன்னிய செய்யுந் திரு.

39

திருவுந் திணைவகையால் நில்லா பெருவலிக்

கூற்றமுங் கூறுவ செய்துண்ணா தாற்ற
மறைக்க மறையாதாங் காம முறையும்

இறைவகையால் நின்று விடும்.

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/23&oldid=1386197" இலிருந்து மீள்விக்கப்பட்டது