பக்கம்:நான்மணிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

23

நான்மணிக்கடிகை 23

பிறக்குங்காற் பேரெனவும் பேரா இறக்குங்கால் நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள் உடம்படிற் றானே பெருகுங் கெடும்பொழுதில்

கண்டனவுங் காணா கெடும்.

41

போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த வேரின்றி வாடும் மரமெல்லாம்-நீர்பாய் மடையின்றி நீணெய்தல் வாடும் படையின்றி

மன்னர்சீர் வாடி விடும்.

42

ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும் காதலா ரென்பார் தகையுடையார் - மேதக்க தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்

முந்துதான் செய்த வினை.

43

பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட ஐவராற் றானே வினைகெடும் ப்ொய்யா நலங்கெடும் நீரற்ற பைங்கூழ் நலமாறின்

நண்பினார் நண்பு கெடும்.

44

நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற விருந்தும் விருப்பிலார் முற்சாம் - அரும்புணர்ப்பிற் பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர் ஊடல்சாம்

ஊட லுணரா ரகத்து.

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/25&oldid=1386230" இலிருந்து மீள்விக்கப்பட்டது