நான்மணிக்கடிகை
31
நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல், சேர்ந்து வழுத்தவரங் கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி
நன்றூட்ட நந்தும் விருந்து.
(61)
பழியின்மை மக்களாற் காண்க வொருவன் கெழியின்மை கேட்டா லறிக - பொருளின் நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியாற்
போற்றாதார் போற்றப்படும்.
(62)
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணின் உருவின்றி மாண்ட வுளவாம் - ஒருவழி நாட்டுள்ளுங் நல்ல பதியுள பாட்டுள்ளும்
பாடெய்தும் பாடலுள.
(63)
திரியழற் காணிற் றொழுப விறகின் எறியழற் காணின் இகழ்ப - ஒரு குடியின் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டு முலகு.
(64)
கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின் முளைக்குழா நீருண்டேல் உண்டாம் - திருக்குழாம் ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்
துன்புறுவா ளாகிற் கெடும்.
(65)