பக்கம்:நான்மணிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

33

நான்மணிக்கடிகை 33

ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப் புல்லினான் இன்புறூ உங் காலேயம் - நெல்லின் அரிசியான் இன்புறூஉங் கீழெல்லாந் தத்தம்

வரிசையான் இன்புறூஉ மேல்.

(66)

பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும் முன்னவா முன்னம் அறிந்தார்கட்கு - என்றும் அவாவா மடைந்தார்கட் குள்ளந் தவாவாம்

அவாவிலார் செய்யும் வினை.

(67)

கைத்தில்லார் நல்லர் கைத்துண்டாய்க் காப்பாரின் வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்

நல்லர் சிதையா தவர்.

(68)

மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன் முகனுரைக்கும் உண்ணின்ற வேட்கை - அகனிர்ப் புலத்தியல்பு புக்கா னுரைக்கும் நிலத்தியல்பு

வான முரைத்து விடும்.

(69)

பதிநன்று பல்லா ருறையின் ஒருவன் மதிநன்று மாசறக் கற்பி - னுதிமருப்பின் . ஏற்றான்வி றெய்தும் இனநிரை தான் கொடுக்குஞ்

சோற்றான்வீ றெய்துங் குடி,

(70)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/35&oldid=1387188" இலிருந்து மீள்விக்கப்பட்டது