பக்கம்:நான்மணிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

37

நான்மணிக்கடிகை 37 -

நாக்கின் அறிப இனியதை மூக்கினான்

மோந்தறிப எல்லா மலர்களும் - நோக்குள்ளுங்
கண்ணினாற் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்
தெண்ணினால் எண்ணப் படும்.            (76)

சாவாத வில்லை பிறந்த உயிரெல்லாந்

தாவாத வில்லை வலிகளும் - மூவா
திளமை யிசைத்தாரு மில்லை வளமையிற்
கேடின்றிச் சென்றாரு மில்,                (77)

சொல்லா னறிப ஒருவனை மெல்லென்ற

நீரா னறிப மடுவினை-யார்கண்ணும் 

ஒப்புரவி னானறிப சான்றாண்மை மெய்க்கண்

மகிழானறிப நறா.                        (78).

நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் பேதை

விடுமன்றோ வீங்கப் பிணிப்பின் அவா.அப்
படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ
மாறு னிறுக்குந் துணிபு.                   (79)

கொடுப்பின் அசனம் கொடுக்க விடுப்பின் உயிரிடை யீட்டை விடுக்க - வெடுப்பிற்

கிளையுட் கழிந்தா ரெடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்.                  (80)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/39&oldid=1379892" இலிருந்து மீள்விக்கப்பட்டது