பக்கம்:நான்மணிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 நான்மணிகள்

 வறுமையினால் அழகும் இளமையும் குன்றும்; கல்லா மையால் குடியும் பெருமையும் குன்றும்; நீர் இல்லாமை யால் பயிரும் பலனும் குன்றும்;அதிகச் சுமையினால் ஆளும் எருதும் குன்றும்.            (81)
 கற்ற அறிஞர்க்கும் தம் ஊர் என்று ஓர் ஊர் இல்லை; கைப்பொருள் உள்ளவர்க்கும் தம் ஊர் என்று ஓர் ஊர் இல்லை; ஒழுக்கம் உள்ளவர்க்கும் தம் ஊர் என்று ஓர் ஊர் இல்லை; ஒழுக்கம் கெட்டவர்க்கும் தம் ஊர் என்று ஓர் ஊர் இல்லை.   (82)
 கல்வி இல்லாதவர்க்கு அவர்களின் வாய்ச் சொல்லே எமன்; செழித்த வாழைக்கு அது ஈன்ற காய்களே எமன்; தீமை செய்பவர்க்கு அவர்தம் செய்கையே எமன்; உயர்ந்த வாழ்வுக்கும் ஒழுக்கம் தவறுபவரே எமன்.           (83)
 நீர் வளத்தால் சிறப்படையும் விளைநிலம்: கடல் வளத்தால் சிறப்படையும் பட்டினம்; நாட்டு வளத்தால் சிறப்படைவர் மன்னர்; கலை வளத்தால் சிறப்படையும் கூத்து.           (84)
 கணவனோடு ஒற்றுமைப்பட்டு வாழ்தல் பெண்களுக்கு நல்லது: அறத்தோடு ஒன்றுபட்டு வாழ்தல் அறிஞர்க்கு நல்லது; தீய ஆட்சியை மாற்றி ஆளுதல் மன்னர்க்கு நல்லது; சுற்றத்தாரைக் கைவிடாது இருப்பது வாழ்வுக்கு நல்லது.(85)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/40&oldid=1359945" இலிருந்து மீள்விக்கப்பட்டது