இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நான்மணிக்கடிகை 47
வைத்ததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினால் ஆகும் அறம். (101)
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் ஒருவன் அறியா தவனும் - ஒருவன் குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன் கணனடங்கக் கற்றானும் இல். (102)
மனைக்கு விளக்கம் மடவார் மடவார் தமக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும் ஒதிற் புகழ்சால் உணர்வு. (103)
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின் நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான் வீவிலா வீடாய் விடும். (104).
நான்மணிக்கடிகை முற்றிற்று