பக்கம்:நான் இருவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் பதை என்னால் காண முடிகிறது. அது என்ன என்று சொல் - வேன்" என்றார் வக்கீல். " ஏதோ மோசடி நடந்திருக்கிறது ஸார் " என்று கர கரத் துச் சொன்னான். • மோசடியா?'என்ன மோசடி ? நீ என்ன சொல்கிறாய் ?" எள், 21 பயந்து போய், அவசரப்பட்டுக் கேட்டார் வக்கீல். " எனக்குச் சொல்ல நா எழவில்லை. என்னோடு வந்து, தாங்களே நேரில் பார்த்துக் கொள்ளுங்கள்." அட்டர்ஸன் தமது பதிலைச் செயலிலே காட்டினார். கோட் டேயும் தொப்பியையும் மாட்டிக் கொண்டு கிளம்பினார். அவர் கிளம்பியதைப் பார்த்ததும் அவன் முகத்தில் பிரகாசமான தெளிவு ஏற்பட்டது. அந்த - மதுவை ருசிபார்க்காமலே : அவர் 2ன் தொடர்ந்தான். மார்ச் மாதத்துக் குளிரடிக்கும் இரவு. காற்றினால் சாய்க் கப்பட்டதுபோல், மங்கிய பிறை வளைவு ஒதுங்கி ஒருச்சாய்த் துக் கிடந்தது. ஒளி பொருந்திய மேகப் படலங்கள் விரைவா கச் சென்றன. காற்றின் சிலுசிலுப்பு பேச்சைக் கூடக் கட்டி 4.து, முகம் குளிரால் விறைத்தது. தெருவில் ஜன நடமாட்டமே இல்லை; துடைத்து விட்டாற்போல் அத்தனை சூன்யம். அட்டர் லன் லண்டனில் அந்தப் பாகத்தை அத்தனை நிர்மானுஷ்யமாய் தாம் கண்டதேயில்லை என்று நினைத்தார். அப்படி இருக்கக் கூடாது என விரும்பினார். தமது சகோதரப் பிராணிகளோடு ஒட்டிப் பழகவேண்டும் என்ற தீரா ஆவல் அவர் மனத்தில் கிளர்ந்தது. ஏனெனில் ஒரு பெரும் விபத்து நேர்ந்து விட்டது என்ற விலக்க - முடியாத எண்ணம் அவருடைய மனத்தில் விழுந்துவிட்டது. அந்தத் தெருவை அவர்கள் நெருங்கியதும் ஒரே பேய்க் காற்றும் புழுதியும் வாரியடித்தன, தோட்டத்தி லிருந்த ஒடிசலான மரங்கள் வளைந்து வளைந்து வேலிக் கம்பி, களில் மோதி விளாசின. இரண்டடி முன்னாலேயே சென்று கொண்டிருந்த பூல் அந்தத் தளத்துக்கு வந்தவுடன் தொப்பியை எடுத்துவிட்டு முகத்து வியர்வையைத் துடைத்துக் கொண் டான்--அத்தனை குளிரிலும் அவன் முகம் வியர்த்தது ! வேக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/52&oldid=1268776" இலிருந்து மீள்விக்கப்பட்டது