பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


விடுதலைக்குப் பின் வயதானவர்களும் படிக்க தொடங்கினர். அநேகமாக இவர்கள் வயதுடைய அனைவரும் முதியோர் பள்ளியில் படித்தவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களே' என்றார்.
வழித் தோழருக்கு நன்றி சொல்லிவிட்டுத், தொடர்ந்து நடந்தோம். எங்கள் கருத்துகளேப் பரிமாறிக் கொண்டோம். இதோ அக் கருத்துக் கதம்பம்:
"நாற்பது வயதானதும் நாளே எண்ணிக் கொண்டு, வேளையை எதிர்பார்த்து உட்கார்ந் திருக்கும் நாம் எங்கே!
எந்த வயதிலும் புதியதைக் கற்கலாம். கற்காதவரை பிறமொழி; கற்றபின் தம் மொழி என்பதை உணர்ந்துள்ள உஸ்பெக் பாட்டிகள் எங்கே!
இரவு, படம் பார்க்க மட்டுமே என்று வளரும் நாம் எங்கே!
இரவு, பாடம் படிக்கவுமான நேரம், புதுமொழி கற்கவுமான நேரம் என்று, காலத்தை வீணாக்காத உஸ்பெக் பாட்டிகள் எங்கே !
பகலெல்லாம் பண்ணேயிலே பாடுபடவா?’ என்று திண்ணையிலே கூடி வம்பளக்கும் நாம் எங்கே?
பகலெல்லாம் பாடுபட்டால் என்ன? உழைப்பிற்கு ஊறுகாய் படிப்பல்லவா என்று புத்தம் புதிய கலைகளைக் கற்கும் உஸ்பெக் பாட்டிகள் எங்கே!" இப்படி ஏங்கின எங்கள் உள்ளம்.