பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

அக்கம்பெனியில் முக்கிய பாத்திரங்களை நடித்து வந்தார். இவரது சங்கீதம், மிகவும் சிலாகிக்கத் தக்கது. கந்தர்வகானம் என்றே இதை சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். பாடுவதில் மூன்று ஸ்தாயிகள் வரை எட்டுவார். அப்படியிருந்தும் ஒரு அபஸ்வரமாவது கேட்கப்படாது. இவரும் ஸ்ரீமதி சுந்தராம் பாளும் ஒரு நாடகத்தில் நடிக்கிறார்கள் என்று பிரசுரம் செய்யப்பட்டால் நாடக தினத்திற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்பாகவே டிக்கட்டுகள் ஆகிவிடும், ஒரு முறை பீபில்ஸ் பார்க் கொட்டகையில் சுகுண விலாச சபையார் லீலாவதி சுலோசனா நாடகத்தை ஒரு தர்ம பண்டுக்காக நடத்திய போது நான் ஸ்ரீதத்தனாக வேஷம் தரித்துக் கொண்டிருக்கையில், தான் அதுவரையில் நாடகங்களில் தரித்த விலையுயர்ந்த ரத்னங்கள் இழைத்த நகைகளையும் பொன் நகைகளையும் எடுத்துக் கொண்டு வந்து "நீங்கள் இவைகளில் என்ன வேண்டுமென்றாலும் அணியுங்கள்” என்று அன்புடன் கேட்டார். அதற்கு நான் “நீ கேட்டதே போதும் எனக்கு, மிகவும் சந்தோஷம் நான் இன்று நடிக்கும் நாடகத்தில் சன்யாசி வேடம் பூண வேண்டியவனாயிருக்கிறேன், பிறகு வேண்டுமானால் கேட்டனுப்புகிறேன்” என்று நான் பதில் சொன்னது ஞாபகமிருக்கிறது. இப்படிப்பட்ட நற்குணவானாயிருந்த போதிலும் தன் உடல் நலத்தை பாதுகாக்காதபடியால், இளவயதிலேயே இவர் பரலோகம் சென்றார். இதை நான் இங்கு எழுதுவது இவரது குற்றத்தைக் கூறும் பொருட்டன்று. நடிகர்கள் முக்கியமாக தங்கள் உடல் நலத்தை ஜாக்கிரதையாய் பாதுகாக்கவேண்டுமென்றுதான்.

ஸ்ரீமதி கே. பி. சுந்தராம்பாள்

இப் பெண்மணி சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள், பெரியவர்களானவுடன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். பன்முறை கிட்டப்பா அவர்களுடன் கதா நாயகியாக நடித்து பெரும்பெயர் பெற்றார்கள். நடிப்பதில் மிகவும் திறமை யுடையவர்கள். ஆயினும் இவருடைய பெயர் தமிழ் நாடெங்கும் பரவச் செய்தது இவர்களுடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்க வாத்தியங்கள் இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமே யாம், அநேக சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியத்தோடு பாடுவது ஒரு