பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

எழுதிக்கொடுத்தார். அன்றியும் பாரிஜாத அபகரணம், ராணி சம்யுக்தா முதலிய நாடகங்களை எழுதியதுமன்றி தக்கபடி நடிகர்களை தேற்றுவித்து தானும் நடித்து தெலுங்கு பிரிவில் நல்ல பெயர் பெற்றார். மேலும் மாலியர் என்னும் பிரெஞ்சு தேசத்து ஹாஸ்ய நாடகக்கவி எழுதிய ஓர் நாடகத்தை தெலுங்கில் மொழி பெயர்த்து வெகு விமரிசையாய் நடத்தினார். அந்நாடகத்தின் பெயர் 'விதிலோக வயித்தியுடு' என்பதாம். இவர் ஒரு முறை உத்தர ராம சரித்திரத்தில் ஒரே இரவில் பதினோறு வேடங்கள் தரித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அன்றியும் புதிய சமூக நாடகத்திற்கு எங்கள் சபையார் பொற் பதக்கம் அளிக்க முன்வந்தபோது தெலுங்கில் 'உபய பிரஷ்டம்' என்னும் நாடகத்தை எழுதி பொற்பதக்கம் பரிசு பெற்றார். இவரது அகால மரணம் எங்கள் சபை செய்த துரதிர்ஷ்டமாகும்.

ஸ்ரீமான் வி.ஸி கோபாலரத்தினம்

இவர் ஹைகோர்ட் வக்கீலான பிறகு எங்கள் சபையில் அங்கத்தினராக சேர்ந்தவர். அதற்கு முன்னமேயே மாகாண கலாசாலையில் வாசித்தபோது எனது இரண்டு மூன்று நாடகங்களில் நடித்துள்ளார். எங்கள் சபையில் சேர்ந்த பிறகு அனேக தமிழ் நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். இவர் எனது மனோகரா, லீலாவதி, சுலோசனா முதலிய நாடகங்களில் நடித் துள்ளார். இவர் மைசூர் குப்பி கம்பெனியார் கன்னட பாஷையில் தடத்திய 'ராஜபக்தி' என்னும் நாடகத்தை அப்படியே வெகு அழகாக தமிழில் மொழி பெயர்த்து அதில் தானே முக்கிய ஆண் வேடம் பூண்டு பன்முறை நடத்தியிருக்கிறார். மேலும் இவரது மாமனாராகிய வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய நான் மொழி பெயர்த்த இரண்டு மூன்று நாடகங்களில் சில காட்சிகளை சேர்த்து எழுதி எங்கள் சபையில் நடித்திருக் கிறார். அவற்றுள் முக்கியமானது சுல்தான் பேட் சப் அசிஸ் டென்ட் மாஜிஸ்டிரேட் என்பதாம். இவர் எங்கள் சுகுண விலாச சபையில் உபதலைவராக பல வருடங்கள் இருந்து அதன் காரியங்களை நடத்தி சில மாதங்களுக்கு முன்பாக காலகதியடைந்தது எங்கள் சபையின் துர்பாக்கியங்களில் ஒன்றாகும். இவர் சென்னை சங்கீத நாடக சபையாரால் நடிப்புக்கலைக்காக ஒரு பொற்பதக்கம் கொடுக்கப்பெற்றார்.

திரு. P. S. தாமோதர முதலியார்

இவர் எனது ஆருயிர் நண்பர் C. ரங்கவடிவேலுவின் மைத்துனர், முதலில் M. P. T. அசோசிஷேனில் நடித்தவர்.