பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வேல் நாயர் தன் உடல் நலத்தை சரியாக பார்த்து வந்தமையால் பல்லாண்டு வாழ்த்து ஒருவருடத்திற்கு முன்பு தான் காலமானார்.

ஸ்ரீமான் அனந்த நாராயண ஐயர்

இவர் பிராம்மணர். இவரும் இவரது சகோதரர்களும் இன்னும் சில பிராம்மணர்களும் சேர்ந்து ஆரியகான சபா என்னும் ஒரு சபையை ஏற்படுத்தினார்கள். முக்கியமாக புராண கதைகளையே நாடகமாக ஆடினார்கள். அனந்த நாராயண ஐயர் கொஞ்சம் குள்ளமானவர். கொஞ்சம் ஸ்தூலமாகவும் இருப்பார். ஆயினும் ஸ்திரீ வேடங்களில் நடிப்பதில் கீர்த்தி பெற்றார். நான் பன்முறை இவர்கள் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். இவரிடத்தில் ஒரு சிறிய குறை என்னவென்றால் பேசும்போது சில சந்தர்ப்பங்களில் உபன்யாசம் செய்வதுபோல் தாராளமாக பேசிவிடுவார். உதாரணமாக வள்ளி நாடகத்தில் வள்ளியாக நடித்தபோது மலைவளம், நீர் வளம், நிலவளம் இவைகளைப் பற்றி உபன்யாசம் செய்வதுபோல் 5 நிமிஷம் பேசினார். பிறகு ஒரு முறை அவரை நான் சந்தித்தபோது இது அவ்வளவு உசிதமல்ல என்று எடுத்துக்காட்ட அதை ஒப்புக்கொண்டு அவ் வழக்கத்தை விட்டு விட்டார்.

G. C. V. ஸ்ரீனிவாசாச்சாரியார்

இவர் 1891-வது ஆண்டுக்கு முன்பு சென்னையில் வெள்ளைக்காரர்கள் மெட்ராஸ் டிரமாடிக் சொசைடியை ஏற்படுத்தியதுபோல் இந்தியர்கள் ஒன்று ஏற்படுத்தவேண்டு மென்று மெட்ராஸ் ஓரியண்டல் டிராமடிக் சொசைடி ஒன்று ஏற்படுத்தினார். அதில் ஆதியில் சாகுந்தலம் முதலிய சம்ஸ்கிருத நாடகங்களையே நடத்தி வந்தார். அக் காலத்தில் வேறெங்கும் நாடகரங்கம் இல்லாதபடியால் சென்னை கோட்டைக்குள் ஆங்கிலேயர்கள் கட்டிய 'Bijou' என்னும் அரங்கத்தில் நடத்தினார். அரிச்சந்திரன் நாடகத்தையும் எழுதி அங்கு நடத்தினார். இவைகளை மிகவும் ஒழுங்காய் நடத்தியபடியால் பல ஆங்கிலேயர்கள் வந்து பார்ப்பதுண்டாம். 1891-வது வருஷத்திற்குப் பின் சுகுண விலாச சபை தமிழ் நாடகங்களை நடத்தியதைப் பார்த்து இவர் தன்னுடைய சபையில் தமிழ் நாடகம் ஒன்றை நடத்தத் தீர்மானித்து 'சந்திர ஹாசன்' என்னும் கதையை நாடகமாக