பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

விட்டார்கள். அவர்கள் கோபமும் தணிந்தது, நாடகமும் சரியாக நடிக்கப்பட்டது.

திரு. சுந்தர ராவ்

இவர் மேற்சொன்ன கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் முக்கிய ஸ்திரீ பாத்திரமாக நடித்தவர். ஆயினும் நான் பார்த்த போது ஸ்திரீ வேஷத்திற்கு தகுந்த உருவமில்லை. மிகவும் பெருத்த உடம்பையுடையவர். அதிலும் கறுப்பு, ஆயினும் சங்கீதம் மாத்திரம் நன்ருய் கற்றவர். இவருடைய பாட்டை கேட்பதற்கே ஜனங்கள் நாடகத்திற்கு வருவார்கள். இவர் சாவேரி ராகம் பாடுவதில் மிக்க கீர்த்தி பெற்றிருந்தார். எந்த நாடகத்தில் என்ன பாட்டைப் பாடினலும் சாவேரி, சாவேரி என்று ஜனங்கள் கத்துவார்கள். அதற்காக ஒவ்வொரு நாடகத்திலும் சாவேரி பாடித்தான் ஆக வேண்டும். இவரது நடிப்புக் கலையைப் பற்றி நான் அதிக மாகக் கூறுவதற்கில்லை. இவர் தாகை ஒரு நாடகக் கம்பெனியைப் பிறகு ஏற்படுத்தினர்.

திரு. குப்பண்ண ராவ்

இவர் கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் இரண்டாவது ஸ்திரீ வேடம் தரித்தவர். மேற் சொன்ன சுந்தர ராவுக்கு நேர் விரோதமான குணங்களை உடையவர். உடல் சிறுத்தவர், சிவப்பு மேனி யுடையவர், சங்கீதமே பாடத் தெரியாதவர், ஆயினும் நடிப்புக் கலையில் மாத்திரம் நிபுணர். இவர் தாரா சசாங்கம் என்னும் நாடகத்தில் தாரையாகவும் ஸ்திரீ சாகசம் என்னும் நாடகத்தில் ராஜ குமாரியாகவும் நன்றாய் நடித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இவர் என்னுடைய லீலாவதி சுலோசனa நாடகத்தில் லீலாவதியாக மிகவும் நன்றாய் நடித்தார். அவர் அச் சமயம் நூதனமாக ஒரு விஷயத்தை நடித்ததைப் பற்றி எனது நாடக மேடை நினைவுகளில் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இவர் பல வருடங்களுக்குப் பின் அதே லீலாவதி வேடத்தை பாலாமணி கம்பெனியில் நடித்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது சுமார் 45 வயதிற்கு மேற்பட்டவராயிருந்த போதிலும் கொஞ்சமும் தளராமல் இளவயதில் நடித்தபடியே அப்போதும் நன்றாய் நடித்தார். இது ஒரு மெச்சத்தக்க விஷயம்.