பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இன்னும் நின்றுகொண்டிருக்கிறீர்கள்” என்றேன். பதில் ஒன்றும் வரவில்லை. வேகமாக உள்ளே புகுந்து அவர் இடுப்பில் கையை வைத்தேன். வெற்றுடம்புடன் இருந்த அவர் மேல் கையை வைத்தவுடன் வியர்வை ஆறாக வடிந்து ஓடுவதைக் கண்டேன். உடம்பின் உள்ளே ஏதோ இரத்தநாளம் வெடிப்பதால்தான் இப்படி வியர்க்கும் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். ஒர் இரத்தநாளம் வெடித்துவிட்டால் உடம்பில் உள்ள இரத்த அழுத்தம் உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும். அப்படிக் குறைந்தால்தான் இரத்தப் போக்கு இல்லாமல் இரத்தம் அதிகம் வீணாகாமல் பாதுகாக்கப்படும். அழுத்தத்தைக் குறைப்பதற்கு அதிலுள்ள தண்ணீர் வெளியாக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இறைவன் திருவருள் மாபெரும் வியர்வை உண்டாக்கினான். அதன்மூலம் இரத்தத்தில் உள்ள நீர் வெளிப்படுவதால், அழுத்தம் குறைகிறது. இதைப் புரிந்துகொண்ட நான், கைத்தாங்கலாக அவரை அழைத்துவந்து, திண்ணையில் படுக்க வைத்துவிட்டேன். சற்றுத் தூரத்தில் குடியிருந்த ஓட்டுநரை வரவழைத்து மன்னார் சென்று மருத்துவரை அழைத்து வருமாறு ஏற்பாடு செய்தேன்.

நிலைமையை ஒரு சிறிதும் புரிந்துகொள்ளாத சகோதரியார் “ஐயா மிகவும் லட்டு தின்று போட்டார்” என்று சொல்லி “அசீரணம். அதற்கு மருந்து வாங்கிட்டு வா” என்றார். அவர் எதிரே ஒன்றும் சொல்ல முடியாத நான், ஓட்டுநரைப் பார்த்து, ’இது மாதிரி சொல்லு, வேர்த்து வேர்த்து ஊற்றுதாம், துணியால் எவ்வளவு துடைத்தாலும் நிற்கலையாம், என்று சொல்லி மருத்துவரையும் கூட்டிக் கொண்டு வா’ என்று சொல்லி அனுப்பினேன். அரை மணி நேரத்தில் அந்த மருத்துவர் வந்து சேர்ந்தார். மிக இளைஞராக உள்ள அவர் அண்மையில்தான் பணியில்