பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. அன்னையார்


என் தாயாரைப் பொறுத்தமட்டில், அவர் பள்ளி சென்று கல்வி கற்காதவர். ஆனால், மிக இளவயதிலேயே பூசை செய்வதில் ஈடுபட்டு, நானும் என் தங்கையும் சிறு பிள்ளைகளாக இருக்கின்ற காலத்தில் ஆன்மிகத் துறையில் மிக மிக உயர்வாக வளர்ந்துவிட்டார். தந்தையார் நிர்வாண தீட்சை என்று சொல்லப்படக்கூடிய தீட்சை எடுத்துக்கொண்டு சிவபூசை செய்தார். தாயார் அப்படியெல்லாம் செய்யவில்லை. அவரும் பூசை செய்தார். ஆனால், இம்மாதிரி வரன்முறைக்குட்பட்டுக் கற்றுக் கொண்டு செய்யவில்லை. அவராகவே ஏதேதோ செய்து மிகப் பெரிய நிலையை அடைந்தார். அவர் அம்பிகையைத்தான் பூசை செய்வார். அதாவது, அவினாசியிலுள்ள கருணாம்பிகை அவருடைய கண் கண்ட தெய்வம். அந்தப் பூசை முடிவில் யார் எந்தப் பிரச்சினையை எழுப்பினாலும் அதற்கு விடை கண்டு சொல்லக்கூடிய அளவு ஆன்மிக வளர்ச்சி பெற்றிருந்தார்.

தாயாரினுடைய ஆன்மிக வளர்ச்சியும், தந்தை யாருடைய அறிவு வளர்ச்சியும் என்னுடைய வாழ்க்கையில் உரமாக அமைந்தன. இரண்டையும் ஒருசேரக் கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன்.

என் தாயாரைப்பற்றி இப்பொழுது நினைக்கும் பொழுது மிக இளமையாக நான் இருந்தபொழுது நடந்த ஒரு நிகழ்ச்சி இன்றும் என் மனத்தில் பசுமையாக இருக்கிறது. மிக ஆழ்ந்த தீவிரமான பக்தியோடு வழிபாடு செய்பவர் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.