பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232 ♦ நான் கண்ட பெரியவர்கள்


பல்கலைக் கழகத்தைத் தூக்கி நிறுத்த முயன்று வரும் துணைவேந்தராகிய இவர் முனைவர் பொன் கோதண்டராமன் (பொற்கோ) அவர்கள்.

மிக நீண்ட காலமாகத் தமிழ்ப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்து, ஓய்வு பெற்ற பின்னரும் பல நூல்களை எழுதி வருபவர் முனைவர் தமிழண்ணல் அவர்கள்.

பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர், பழைமையில் ஊறினாலும் புதுக்கவிதை புனைவதில் சிறந்து நிற்பவர் முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைமை பூண்டுள்ளவர் இவர். தமிழில் அதிகம் வளர்ச்சியடையாத நாடகங்களை வளர்க்கும் கடமையை மேற்கொண்டுள்ளவர் முனைவர் அரசு அவர்கள்.

மதுரைப் பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறையில் தலைமை பூண்டு தமிழை வளர்ப்பவர் முனைவர் மோகன் அவர்கள்.

அப்பல்கலைக் கழகத்திலேயே தமிழ்த் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாக நடத்துபவர் முனைவர் வேங்கடராமன் அவர்கள்.