பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நடந்தவற்றை விரிவாகக் கூறி, அன்று தமிழகம் இருந்த மனக்கொதிப்பு நிலையில், கலைவாணரின் இந்தப் பேச்சு ஒரு வடிகாலாகவே அமைந்தது என்றும், பேச்சை நடுவில் நிறுத்தியிருந்தால் ஒரு கலவரமே ஏற்பட்டு, இதனால் வானொலிக்கும் நட்டமுண்டாயிருக்கும் என்றும் இவற்றையெல்லாம் அ.ச.ஞா. வோடு பேசி, நாங்கள் இடையில் நிறுத்தாமல் அப்படியே விட்டுவிட்டோம் என்றும் தொலைபேசியில் பேசிமுடித்தார். நிலைமையைப் புரிந்துகொண்ட அமைச்சரும் மிக்க பெருந்தன்மையோடு இதனை அப்படியே விட்டுவிட்டார்.

வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக நான் பணிபுரிந்த மூன்றாண்டுகளில் மேலே கூறப்பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றதை என்னால் மறக்கவே முடியவில்லை.