பக்கம்:நாயகர் பெருமான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

வர்க்கா வேத ஆராய்ச்சி செய்தவர். அவ்வேதங்களின் மூலம், அரேபியாவில் ஒரு நபி தோன்றுவார் என்ற செய்தியை அறிந்து அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பெருமான் அவர்களை நேரில் சந்தித்தபோது, இறைவன் மீது ஆணையிட்டு “இம் மக்கள் கூட்டத்திற்கு ஆண்டவன் உம்மை நபியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். இறைவனின் செய்திகளை அறிவிக்கும் தேவ தூதரே உம்மிடம் வந்தவர். மக்கள் உங்களைப் பொய்யன் என்று தூற்றுவார்கள். பெருந் தொல்லைகளை விளைவிப்பார்கள். உமக்கு எதிராகப் போர் புரிவார்கள். நாட்டை விட்டே துரத்துவார்கள். அப்படி நடக்கும் போது நான் உமக்காகப் போராடுவேன்” என்று கூறினார்.

பெருமான் அவர்களை இறைவனுடைய தூதர் என்று முதன் முதல் ஏற்றுக் கொன்டதும், சிலை வணக்கத்தைக் கைவிட்டு, ஒரு தெய்வக் கொள்கையை ஒப்புக்கொண்டு பின்பற்றியதும், முதலில் பெருமானுக்கு உறுதுணையாக இருந்ததும் கதீஜாப் பிராட்டியாரே யாவார்கள்.

பெருமானவர்களிடம் வெளியாகிய தேவ தூதர் ஜிப்ரீல் ஆவார். இத்தூதர் பின் பல முறைகள் அவ்வப்போது தோன்றித் தெய்வச் செய்திகளைப் பெருமானுக்கு அறிவிப்பார். பெருமானவர்கள் தமக்கு வெளியாக்கப்பட்ட தெய்வச் செய்திகளை முதலில் மிக நெருங்கியவர்களிடம் மட்டுமே