பக்கம்:நாயகர் பெருமான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

துறந்து விட்டார்” என்று கூறினார்கள். அதைக் கேட்ட அவள் தன் துயரத்தை அடக்கிக் கொண்டு, “நாம் அனைவரும் ஆண்டவனுக்காகவே யிருக்கிறோம், அவனிடமே மீண்டும் போய்ச் சேருவோம்” என்று கூறினாள். தொடர்ந்து, “பெருமான் அவர்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.

அந்த மனிதர்கள் அதற்கு மறுமொழி கூறாமல், “அம்மா, உன் சகோதரரும் போரில் இறந்து விட்டாரே!” என்று கூறினார்கள். அதைக் கேட்ட பின்னரும் அவள் தன் துன்பத்தைச் சற்றேனும் வெளிக் காட்டாமல், “நாம் அனைவரும் ஆண்டவனுக்காகவேயிருக்கிறோம். அவனிடமே மீண்டும் போய்ச் சேருவோம்'” என்று கூறினாள். தொடர்ந்து, பெருமான் அவர்கள் எப்படி யிருக்கிறார்கள்?” என்று கேட்டாள்.

அந்த மனிதர்கள் அதற்குப் பதில் உரைக்காமல், அம்மா, உன் கணவரும் கொல்லப்பட்டுவிட்டாரே! என்று கூறினார்கள். அதைக் கேட்ட அந்தப் பெண்ணால் தன் துயரத்தை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. இருப்பினும் பெருமூச்சு விட்டுக் கொண்டே, நாம் அனைவரும் அல்லாவுக்காகவே இருக்கிறோம். அவனிடமே திரும்பிச் செல்வோம்?” என்று கூறினாள், மறவாமல், பெருமானவர்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று கேட்டார்.

“பெருமான் அவர்கள் நலமாக இருக்கிறார்கள்” என்று அவர்கள் சொன்ன பின், அவளுக்கு